Thursday, October 13, 2011

வசந்தபாலனின் எல்லா படத்திலும் நான் நடிக்கணும் : அஞ்சலி...!

தமிழ்சினிமாவில் எனக்கென்று ஒரு அங்கீகாரத்தை கொடுத்ததே டைரக்டர் வசந்தபாலன் சார் தான். அவரின் எல்லா படத்திலும் நான் ஒரு சின்ன கேரக்டரிலாவது வந்து போகணும் என்று கூறியுள்ளார் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகான அஞ்சலி, வசந்தபாலனின் அங்காடித்தெரு படம் மூலம் பிரபலமானார். அங்காடித்தெரு படத்திற்கு பிறகு அஞ்சலியின் ரேஞ்ச், கோலிவுட்டில் ஒரு பெரிய இடத்தில் கொண்டு போய் சேர்த்துள்ளது. அதுமட்டுமன்றி சமீபத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய, இந்த வளர்ச்சிக்கு காரண‌மே வசந்தபாலன் தான் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் அஞ்சலி.

அங்காடித்தெரு படத்திற்கு பிறகு, வசந்தபாலனின் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் அரவான். ஆதி, பசுபதி, பேராண்மை தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், 18ம் நூற்றாண்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. வசந்தபாலனின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிகர் பரத்தும், அஞ்சலியும் சேர்ந்து நடித்துள்ளனர். இதுகுறித்து அஞ்சலி கூறுகையில், தமிழ் சினிமாவில் நான் இந்த நிலைமைக்கு வர காரணமே வசந்தபாலன் சார் தான். அரவான் படத்தில் ஒரு சிறிய ரோலில் நான் நடித்துள்ளதை பெருமையாக கருதுகிறேன். அரவான் படம் மட்டுமல்ல, இனி அவர் அடுத்து இயக்கபோகும் எல்லா படத்திலும் நான், ஒரு சின்ன ரோலிலாவது நடித்து விட வேண்டும் என்றார்.

இதனிடையே எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பாக்ஸ் ஸ்டார் கம்பெனியில் இருந்து அஞ்சலிக்கு நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும், இந்தபடத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக முருகதாஸின் உறவினர் கிங்ஸ்லி நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
Share