Thursday, October 18, 2012

உங்க குழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில ஆலோசனைகள்

இன்றைய காலத்தில் உடல் பருமன் பெரியவர்களை மட்டும் பாதிக்கவில்லை, குழந்தைகளையும் தான். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. ஆகவே அவர்களுக்கு இத்தகைய நோய்கள் எல்லாம் தாக்காமல் இருக்க, தேவையில்லாத கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டாம். ஆனால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது என்பது சற்று கடினமானது. ஏனெனில் அவர்களுக்கு பிடித்தவற்றை சாப்பிடாமல் வைப்பது என்பது மிகவும் கடினம். மேலும் அவர்களது டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிகமான அளவில் உண்ணுதல் போன்றவைகளும் குழந்தைகளை குண்டாக்குகின்றன. ஆகவே அவர்களை சரியாக பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்களை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • குழந்தைகள் குண்டாவதற்கு அவர்களின் உடலில் இருக்கும் மரபணுக்கள் பெரும்பாலும் காரணமாகின்றன. ஆகவே மறக்காமல் மருத்துவரை உடனே அணுக வேண்டும். ஏனெனில் மரபணுவில் ஏதாவது திடீரென மாற்றங்கள் ஏற்பட்டாலும், குழந்தைகள் குண்டாவார்கள்.
  • குழந்தைகளின் உடல் எடை சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டே வர வேண்டும். மேலும் அதற்கேற்றவாறு உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் அதிகமான உணவுப் பொருட்களை கொடுத்தால், அதில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குழந்தைகளின் உடலில் சென்று உடல் பருமனை ஏற்படுத்திவிடும். ஆகவே அவர்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்குமாறு பார்த்து வரவும்.
  • * குழந்தைகளை எப்போதும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். அதாவது, குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்து டி.வியை பார்த்துக் கொண்டிருந்தால், அவர்களை விளையாட சொல்ல வேண்டும். ஏனெனில் இதனால் குழந்தைகளின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் ஓடுதல், நடத்தல், குதித்தல், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுக்களை விளையாட வைக்கலாம்.
  • குழந்தைகளுக்கு அதிகமான அளவில் பாஸ்ட் ஃபுட் உணவுகளான பிரன்ச் ப்ரைஸ், சிப்ஸ், ப்ரைடு சிக்கன், மில்க் ஷேக் போன்றவற்றை கொடுக்க வேண்டாம். ஏனெனில் இவற்றில் அதிக அளவு கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இதனை அதிகம் சாப்பிட்டால், பிற்காலத்தில் இதய நோய் விரைவில் வந்துவிடும்.
  • அதிக அளவில் கொழுப்புக்கள் உள்ள பாலைக் கொடுப்பதை விட, குறைந்த அளவில் கொழுப்புக்கள் இருக்கும் பாலை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பிற்காலத்தில் குண்டு தான் ஆவார்கள்.
  • பால் பொருட்களை கொடுக்கும்போது கூட, கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • குண்டாகும் குழந்தைகள் விரைவில் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஏனெனில் குண்டாக இருப்பதால், நிறைய பேர் கிண்டல் செய்வார்கள். ஆகவே அவர்கள் எடையை குறைக்க ஊக்குவிப்பதோடு, அவர்களுடன் அன்பாக, பாசத்துடன் நடக்க வேண்டும்.
  •  மாலை வேளையிலோ அல்லது மற்ற வேளைகளிலோ, அவர்களுக்கு உண்ண உணவுகளை கொடுக்கும் போது, ஆரோக்கியமற்ற உணவுகளைக் கொடுக்காமல், அவர்களுக்கு ஏதேனும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஆகவே, மேற்கூறிய வழிகளைப் பின்பற்றினால், குழந்தைகள் எடை கூடாமல், அழகாக பிட்டோடு இருப்பார்கள்.
Share

Wednesday, October 17, 2012

குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள் அடிக்கவோ திட்டவோ வேண்டாம்


இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு குறும்பு செய்யவில்லையென்றால் வீடே வெறிச்சோடி இருப்பது போல் இருக்கும். ஆனால் நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் எதையும் செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் எதாவது செய்ய போய், உடல் நலத்திற்கு ஏதேனும் நோய் வந்துவிடுமோ என்ற பயம் தான். அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் இன்னும் நமது முன்னோர்கள் சொன்ன பழமொழியான “ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது” என்பது தான்.
மேலும் வாசிக்க 

Share

Sunday, July 1, 2012

ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது

ஐரோப்பிய கிண்ண இறுதி ஆட்டத்தில் இத்தாலியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியன் ஸ்பெயின் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது.
ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டி கடந்த ஜுன் மாதம் 8ஆம் திகதி போலந்து மற்றும் உக்ரேனில் தொடங்கியது.
இந்த போட்டியில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த முன்னணி 16 அணிகள் பங்கு பெற்றன. இதில் சி பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் போர்ச்சுகல் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வலுவான ஜேர்மனி அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி நேற்று உக்ரேனின் கீவ் நகரில் நடைபெற்றது.





Share

Saturday, June 30, 2012

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன. உங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் சங்கேத பாஷையாகக் கூட முத்தத்தை பயன்படுத்தலாமாம். எங்கு முத்தமிட்டால் என்ன அர்த்தம் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.

காதலர்கள் அதிக அளவில் முத்தமிட நினைக்கும் இடம் உதடுகள் உதட்டில் முத்தமிட்டால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்.
கைகளில் முத்தமிட்டால் நான் உன்னை பக்தியுடன் வணங்குகிறேன் என்று அர்த்தமாம்.
மேலும் வாசிக்க




Share

Thursday, June 28, 2012

சென்னை சூப்பர் கிங்ஸ்லிருந்து டோனி விலகலா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 5 ஆண்டுகளாக அணித்தலைவராக இருந்து வழிநடத்திய இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி, தற்போது அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக நியமிக்கப்பட்ட டோனி கடந்த 5 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ஐ.பி.எல் தொடரில் வழிநடத்தி வருகிறார்.
இவரது சிறப்பான வழிநடத்தல் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
Share