Monday, March 28, 2011

உலக கிண்ணத்தை வென்று சரித்திரம் படைப்போம்


இந்த முறை உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைப்போம் என்று நியூசிலாந்தின் அதிரடி வீரர் ரோஸ் டெய்லர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக நியூசிலாந்து அணி அங்கு தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
பயிற்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் ரோஸ் டெய்லர் கூறியது:
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை 6 முறை அரையிறுதி வரை முன்னேறியுள்ளோம். ஆனால் இறுதிப் போட்டிக்கு ஒருமுறை கூட வந்தது இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஆனால் இந்த முறை எங்கள் அணி உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும்.
உலகக் கோப்பைக்கு முன் தொடர்ந்து 11 ஆட்டங்களில் தோல்வியடைந்து இருந்தோம். உலகக் கோப்பையில் தொடக்கத்தில் தடுமாற்றத்துடன் தொடங்கினாலும், அடுத்து அடுத்து வந்த ஆட்டங்களில் எங்கள் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் ஒவ்வொரு வீரரும் தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுதான் எங்கள் வெற்றிகளுக்குக் காரணம்.
அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை அணிக்குதான் அதிக எதிர்பார்ப்பு என்ற நெருக்கடி உள்ளது என்றார் அவர்.
Share