Monday, January 23, 2012

சுரேஷ் கோபியை வறுத்தெடுக்கும் மலையாளிகள்

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள நட்சத்திரங்கள் பலர் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் பாதகமில்லாத நடுநிலையான நிலைபாட்டில் இருந்துகொண்டு மீடியாவைக் கவர்ந்து வருகிறார்கள். மம்முட்டி சத்தமில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை வந்து சந்தித்து விட்டு சென்றிருக்கிறார். தற்போது நிபுணர் குழு அறிக்கை தமிழகத்துக்கு சாதகமாக வந்திருக்கும் நேரத்தில் தமிழகம், கேரளா என இரண்டு மாநிலங்களிலும் பிரச்சினை மேலும் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்த சிக்கலான நேரத்தில், பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்று நினைக்கும் முன்னணி மலையாள நட்சத்திரங்களான, சுரேஷ் கோபி, திலீப், முகேஷ், இயக்குநர்கள் சித்திக், கமல் உள்ளிட்ட சில பிரபலங்கள், இருதரப்புக்கும் பாதகமில்லாத முடிவு வேண்டி ஒரு அமைதிப் பிரார்த்தனையை நடத்தியிருக்கிறார்கள். "வன்முறை மேலும் பிரச்சினையை ஏற்படுத்துமே தவிர, தீர்வு ஏற்பட வழி வகுக்காது, இந்தப் பிரச்சினைக்கு கோர்ட் நல்ல ஒரு தீர்ப்பை வழங்கும். அதை இருமாநில மக்களும் அமைதியாக ஏற்றுக் கொள்ளவேண்டும்" என்று கூறியிருக்கிறார் சுரேஷ் கோபி. சுரேஷ் கோபியின் இந்த நடுநிலையான பேச்சுக்குகே அவரை வறுத்து எடுக்கிறார்களாம் மலையாளிகள். இதைவிட மம்முட்டி மீது செம காட்டத்தில் இருக்கிறார்களாம். காரணம் ஜெயலலிதாவை எதற்காக சந்தித்தார் என்பதை இன்னும் மீடியாவுக்குச் சொல்லவில்லை என்பதுதான் காரணம் என்கிறார்கள்.
Share