Wednesday, January 11, 2012

பஞ்சாலையின் யதார்த்தமான பதிவு!

பஞ்சாலைகளின் பணியாற்றும் மக்களின் யதார்த்தமான பதிவுதான் கிருஷ்ணவேணி பஞ்சாலை படம், என்று அப்படத்தின் நாயகி நந்தனா கூறியுள்ளார். டைரக்டர் தனபால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. ஹேமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் கேரள நாயகி நந்தனா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை படம் குறித்து நடிகை நந்தனா அளித்துள்ள பேட்டியில், கிருஷ்ணவேணி பஞ்சாலை தமிழில் எனது முதல் படமாகும். இப்படத்தின் இயக்குனரான தனபால் பத்மநாபன் ரொம்ப யதார்த்தமாக இப்படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் எனது பெயர் பூங்கோதை. எனது தோழிகள் பூ என்று கூப்பிடுவார்கள். பஞ்சாலையில் பணியாற்றும் மக்களின் யதார்த்தப் பதிவுதான் இப்படம். இதில் ஒரு காதல் கதையும் இருக்கிறது. இப்படத்தின் ஹீரோவான ஹேமச்சந்திரனுடனான லவ் கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கிறது, என்று கூறியுள்ளார்.
Share