Saturday, November 5, 2011

தனுஷின் புதுத் திட்டம்!

செய்தி கொஞ்சம் ஆச்சர்யமூட்டக் கூடியதுதான்! ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. மண் வாசனை இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் கடைசி புதல்வராக பிறந்த தனுஷ் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனுஷின் திறமை பளிச்சிட்டது. 
தற்போது 'ஆடுகளம்' அவரை தேசிய அளவில் சிறந்த நடிகராக உயர்த்தி விட்டது.ரஜினியின் மருமகன் என்ற கூடுதல் அனுகூலம். இதுதவிர இன்று தமிழ்சினிமாவின் க்ரியேட்டிவ் இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் செல்வராகவனின் தம்பியாக அவரது இயக்கத்தில் தொடர்ந்து கான்டெம்ரரியான கதைகளில் நடித்து சினிமா இயக்கத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறார். 

இது போதாதா தனுஷ் ஒரு படத்தை இயக்க!? ஆனால் தனுஷ் தனது முதல் படத்தை இயக்க இருப்பது கோலிவுட் இல்லை! பாலிவுட்டில்! ஆமாம்! தனுஷ் ஹிந்திப் படம் இயக்கும் முயற்சியில் பாதி கிணறு தாண்டிவிட்டார் என்கிற ஹாட் செய்தி நம்மை எட்டுகிறது. பாலிவுட்டின் முன்னணி ஹீரோவுக்கு தனுஷ் சொன்ன கதை பிடித்ததோடு, ஒரு விஜபியின் மருமகன், தேசிய விருது நடிகர் இயக்குகிறார் என்றால் கசக்கவா செய்யும்.! ஹீரோவும் ஓகே சொல்லிவிட, தனது முதல் ஹிந்திப் பட இயக்கத்தை அடுத்த ஆண்டின் இறுதியில் தொடங்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் தனுஷ்! இந்த செய்தி அவரது நட்பு வட்டத்தில் கசிந்ததுமே மீடியா நண்பர்கள் தனுஷுக்கு தொலைபேச.. "இத்தனை சீக்கிரம் எப்படி செய்தி பரவுகிறது! இந்தப் படம் மிகத் தொடக்க நிலையில் இருகிறது" என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். எதற்கு ஹிந்தி என்பதற்கும் பதில் வந்திருக்கிறது அவரிடமிருந்து.." அதிக ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்றால் பாலிவுட் சரியான களம்தான்!
Share