Saturday, November 5, 2011

பல்லை உடைப்பேன்: ராம்சரண் தேஜாவுக்கு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை...!


நிகழ்ச்சி ஒன்றில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசை புகழ்ந்து தள்ளிய தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவின் பல்லை உடைப்பேன் என்று சக மூத்த நடிகர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். தமிழில் வெளியாகியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் ஏழாம் அறிவு படம், தெலுங்கிலும் செவன்த் சென்ஸ் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும், இளம் ஹீரோவான ராம்சரண் தேஜா, முருகதாசை புகழ்ந்து தள்ளியுள்ளார். தமிழுக்கு கிடைத்த இப்படி‌யொரு இயக்குநர், தெலுங்கிலும் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்ட வசமானது என்று கூறினார். ராம்சரணின் இந்த பேச்சு, சகநடிகர் பாலகிருஷ்ணாவை கோபமடையச் செய்துள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய பாலகிருஷ்ணா, ராம்சரணின் ‌பெயரைச் சொல்லாமல் சமீபத்தில் நடிகர் ஒருவர், தமிழ் டைரக்டரை புகழ்ந்து தள்ளி பேசியுள்ளார். அது தவறல்ல. ஆனால் அப்படியொரு டைரக்டர் தெலுங்கில் இல்லாதது துரதிர்ஷ்டம் என்றுள்ளார். சினிமா வரலாறு தெரியாமல் எதையாவது பேசக்கூடாது. தெலுங்கு சினமாவிலும் நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர். சும்மா ஒன்றிரண்டு படத்தில் நடித்து விட்டு இங்குள்ளவர்களை தரக்குறைவாக பேசுவது சரியல்ல. இனியும் இப்படி பேசினால் அவரது பல்லை உடைப்பேன் என்று கூறியுள்ளார்.

இத‌னிடையே, இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்து இருக்கும் சிரஞ்சீவி, ராம்சரண் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் தெலுங்கிலும் நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர் என்றார்
Share