Wednesday, November 23, 2011

நடிகையை கல்யாணம் பண்ணமாட்டேன் : ஜெய் பேட்டி!

அஞ்சலிக்கும், எனக்கும் இடையே காதல் எதுவும் கிடையாது. நிச்சயமாக, ஒரு நடிகையை நான் திருமணம் செய்ய மாட்டேன், வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். சமீபத்திய சில நாட்களாக கோலிவுட்டே பரபரக்கும் ஒரு பேச்சு, ஜெய்-அஞ்சலி பற்றிய காதல் தான். இருவரும் எங்கேயும் எப்போதும் படத்தில் சேர்ந்து நடித்தனர். படத்திலேயே இரண்டுபேரது ஜோடி பொருத்தம் சூப்பர் என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த காதல் கிசுகிசுவால் அதிர்ச்சியான அஞ்சலி, நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் காதலிப்பதாக கூறும் அந்த நடிகருடன் சேர்ந்து இனி நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜெய், இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், எங்கேயும் எப்போதும் படத்தில் தான் நானும், அஞ்சலியும் சேர்ந்து நடித்தோம். கடைசியாக ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரை பார்த்தேன். அதன்பிறகு அவரை சந்திக்கவே இல்லை. எங்களுக்குள் காதல் என்று கூறுவது எல்லாம் வெறும் வதந்தி தான். என் கவனம் எல்லாம் இப்போது நடிப்பில் தான் இருக்கிறது. நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. நான், நிச்சயமாக காதல் திருமணம் செய்ய மாட்டேன். அதிலும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்ய மாட்டேன். என் வீட்டில் பார்க்கும் பெண்ணை சந்தோஷமாக திருமணம் செய்வேன்.

தற்போது சிம்புவின், வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறேன். அடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளேன்.
Share