Tuesday, November 22, 2011

4நாளில் 10லட்சம் பேர்: தனுஷின் கொலைவெறி பாடல் சாதனை!

3 படத்தில், தனுஷே எழுதி, பாடியிருக்கும் கொலை வெறி டி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 4நாளில் சுமார் 10லட்சம் பேர் இந்த பாடலை கேட்டுள்ளனர். நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் முதல்படமான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

"ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறிடி என்று தொடங்கும் அந்த பாடலை தனுசே எழுதி, பாடியிருக்கிறார். புதுமுகம் அனிருத் என்பவர் இசையமைத்து இருந்தார். இந்தபாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் இந்தபாடலை 10 லட்சம் பேர் வரை கேட்டு இருக்கிறார்கள். இது, தென்னிந்திய பட உலகில், ஒரு புதிய சாதனை. குறிப்பாக, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பாடலை கேட்டுவிட்டு, தனுஷ்-ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் பாராட்டியிருக்கிறார்கள். இதனால் கணவன்-மனைவி இருவரும் மிகுந்த உற்சாகமாக காணப்படுகிறார்கள்.
Share