Tuesday, November 8, 2011

சென்னையில் குடியேறியது நயன் - பிரபுதேவா ஜோடி


நயன்தாரா - பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. திருமணத்திற்கு ஆயத்தமாகும் வகையில் இருவரும் இப்போதே சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியிருக்கிறார்கள். பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வில்லு படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.

அவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக, பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், கொச்சியிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.
Share