Monday, November 7, 2011

பில்லா 2 கோவா படப்பிடிப்பு முடிந்தது

'பில்லா 2' படத்தின் வேலைகளை முடித்து சென்னை திரும்பியுள்ளார் நடிகர் அஜித். கடந்த ஒரு மாத காலமாக கோவாவில் 'பில்லா 2' படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அஜித் உட்பட படத்தின் நாயகி பார்வதி ஓமனகுட்டன் மற்றும் சக்ரி டோலேட்டியும் அவரது குழுவினரும் கோவாவில் ஒரு குடும்பமாகவே இருந்து வெற்றிகரமாக முடித்துள்ளனர். கடைசி நாள் படப்பிடிப்பின் போது பார்வதி ஓமனகுட்டன் பெரிய கேக் ஒன்றை ஆர்டர் செய்து அனைவரையும் ஆச்சர்யபட வைத்தார். அஜித்தின் வேண்டுகோளின்படி இயக்குநர் கேக் வெட்ட அனைவரும் பகிர்ந்துகொண்டனர். மேலும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் முக்கிய செய்தி என்னவென்றால் இவர்கள் தேர்வு செய்த இடங்கள் இதுவரை எந்த சினிமாவிலும் காண்பித்ததில்லயாம். பெருமைப்படுகிறது படக்குழு.
Share