Thursday, October 6, 2011

மீண்டும் சரித்திரத்தை கையில் எடுத்த சாமி...!

உயிர், மிருகம், சிந்து சமவெளி என அடுத்தடுத்து சர்ச்சையான படங்களை இயக்கி, சர்ச்சை டைரக்டராக உருவெடுத்திருக்கும் டைரக்டர் சாமி, இப்போது புதிய படம் எதையும் இயக்கவில்லை. அதற்குபதிலாக ஏற்க‌னவே பாதி எடுத்தநிலையில் இருக்கும் "சரித்திரம்" படத்தை மீண்டும் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

மிருகம் படத்தை தொடர்ந்து டைரக்டர் சாமி, மீண்டும் ஆதியை வைத்து சரித்திரம் என்ற படத்தை இயக்கி வந்தார். ஆதியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடித்து வந்தார். பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிலபல காரணங்களால் இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன்பிறகு சிந்து சமவெளி படத்தை இயக்கி, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பலைகளுக்கு ஆளானார் சாமி. சிந்துசமவெளி படத்திற்கு பிறகு வேறு எந்தபடத்தை இயக்காமல் இருந்து வந்த சாமி, இப்போது மீண்டும் தனது முந்தைய படமான சரித்திரம் படத்தை கையில் எடுத்துள்ளார். இதற்காக ஏற்கனவே இந்தபடத்தில் நடித்து வந்த ஸ்ரீதேவிகாவிடம் மீதி படத்தை முடித்து ‌கொடுக்கும்படி கேட்டுள்ளாராம் சாமி. தற்போது ஸ்ரீதேவிகா திருமணமாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார். ஆனாலும் எப்படியாவது இந்தப் படத்தின் மிச்ச காட்சியில் சிலவற்றிலும் நடித்துக் கொடுங்கள் என்று கேட்டுள்ளாராம் சாமி.
Share