Tuesday, March 15, 2011

கருத்தடை மாத்திரைப் பயன்பாடு


கர்ப்பமாவதைத் தடுப்பதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. கர்ப்பம் தரியாத பாதுகாப்பான நாட்களில் உறவை வைத்துக் கொள்ளலாம். இந்த நாட்களை தம்பதியர் அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்தலாம்.
அடுத்ததாகப் பயன்பாட்டிலுள்ள முறை கர்ப்பபைக்குள் விந்தணு உட்செல்லாமல் தடுக்கும் இம்பிளானோன் (IMPLANON)  எனப்படும் தடுப்பு. இது மருத்துவரின் ஆலோசனை மற்றும் உதவியோடு மேற்கொள்ள வேண்டும்.
கருப்பைக்குச் செல்லும் இரட்டைக் குழாய்களைக் (FALLOPIAN TUBES) கட்டுதல், முற்றாக மூடுதல் (SEAL SHUT) அல்லது மின்சாரக் கத்தி மூலம் பொசுக்கி விடுதல் (CAUTERIZATION) என்பனவாகும் ஆண் உறைப் பாவனை மிகச் சிறந்த கருத்தடை உபாயமும் நோய்த் தடுப்பு வழிமுறையுமாகும்.
மிகப் பரவலாக பாவனையிலுள்ள முறை கருத்தடை மாத்திரை உட்கொள்ளலாகும். இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இல்லாவிட்டால் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய அறிவியல் முன்னேற்றம் என்று கருத்தடை மாத்திரை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. 1970 களில் பெண் விடுதலைக்கான குரல் எழுந்த போது கருத்தடை காத்தரைக்கான முக்கியத்துவம் உணரப்பட்டது. ஒரு கணக்கின்படி பத்துக்கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இதன் மூலம் தேவையற்ற மகப் பேற்றைத் தவிர்த்துள்ளனர்.
கருத்தடை  மாத்திரைகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சில பாவனையாளர்கள் மார்புப் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். மார்புப்புற்றுநோய்க்கும் கருத்தடை மாத்திரைப் பாவனைக்கும் தொடர்பு இருப்பதாக மார்புப் புற்று நோயால் துன்பப்படும் பெண்கள் நம்புகின்றனர்.
ஒரு சிறந்த கருத்தடை மாத்திரை இப்படி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கருத்தடை மாத்திரைகளில் இரண்டு ஹோர்மோன்கள் இருக்கின்றன. அவற்றின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும். அதேசமயம் கருத்தடை செய்வதில் வலுவுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
கருத்தடை மாத்திரைப் பாவனையாளர்களுக்கு தலைச்சுற்று, குமட்டல், எடைகூடுதல், இரத்தக்குழாய்களில் கட்டி ஏற்படுதல் போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. ஒரு சிறந்த கருத்தடை மாத்தரையானது  இவற்றைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்குப் பாலூட்டும் தாய் கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருத்தல் வேண்டும்.
மாதவிடாய் வருவதில் தடங்கல் ஏற்படக்கூடாது. சில பெண்களுக்கு பெருமளவில் குருதிப் போக்கு ஏற்படுகிறது. அதைத் தடுப்பதற்கு சில மருத்துவர்கள் கருத்தடை மாத்திரையைக் கொடுக்கிறார்கள். இது முறையான சிகிச்சை முறையல்ல.
மாத்திரைகள் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் சகாய விலையில் கிடைக்க வேண்டும். முற்றாகப் பாதுகாப்பான பக்க விளைவுகளற்ற கருத்தடை மாத்திரைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அமெரிக்காவின் எப் டி ஏ (FDA) எனப்படும் உணவு மற்றும் மருத்துவப் பொருள் நிர்வாகம் (FOOD AND DRUG ADMINISTRATION)  1960ம் ஆண்டில் கருத்தடை மாத்திரைக்கு அங்கீகாரம் வழங்கியது. இப்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஒரு சிறந்த கருத்தடை மாத்திரையை உருவாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
கருத்தடை மாத்தரைகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன .சில பாவனையாளர்கள் மார்புப் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். மார்புப் புற்று நோய்க்கும் கருத்தடை மாத்திரைப் பாவனைக்கும் தொடர்பு இருப்பதாக மார்புப் புற்று நோயால் துன்பப்படும் பெண்கள் நம்புகின்றனர்.
ஒரு சிறந்த கருத்தடை மாத்திரை இப்படி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கருத்தடை மாத்திரைகளில் இரண்டு ஹார்மோன்கள் இருக்கின்றன. அவற்றின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும் அதே சமயம் கருத்தடை செய்வதில் வலுவுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
கருத்தடை மாத்திரைப் பாவனையாளர்களுக்கு தலைச்சுற்று, குமட்டல், எடைகூடுதல், இரத்தக் குழாய்களில் கட்டி ஏற்படுதல் போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. ஒரு சிறந்த கருத்தடை மாத்திரையானது இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைக்குப் பாலூட்டும் தாய் கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருத்தல் வேண்டும்
Share