Monday, January 30, 2012

நடிகையின் கணவரை தாக்கிய ஷாருக்கான்



பாலிவுட் நடிகை பாராகானின் கணவரை ஷாருக்கான் தாக்கியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அக்னி பாத் திரைப்படத்தில் கிருத்திக் ரோஷன், சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
அக்னிபாத் வெற்றியை கொண்டாடுவதற்காக நடிகர் சஞ்சய் தத், மும்பை புறநகரில் உள்ள நட்த்திர விடுதி ஒன்றில் திரையுலக நடிகர்களுக்கு விருந்து வைத்தார்.
இந்த விருந்தில் பாலிவுட் நடிகர் பாரா கானின் கணவர் ஷிரிஷ் குந்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். நேற்று காலை வரை நீடித்த இந்த விருந்தில் அதிகாலை(இந்திய நேரம்) 4.30 மணி அளவில் ஷாருக்கான் எதிர்பாராத விதமாக வந்து ஷிரிஷ் குந்தரை தாக்கினார்.
இதைப்பார்த்த நடிகர் சஞ்சய் தத், சண்டையை விலக்கி ஷாருக்கானை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷிரிஷ் குந்தரின் நண்பர் ஒருவர் கூறுகையில், ஷாருக்கானின் ரா ஒன் திரைப்படத்தை ஷிரிஷ் குந்தர் விமர்சித்தார். இதையடுத்து பிரியாங்கா சோப்ராவுடனும் ஷாருக்கானை இணைத்தும் பேசினார்.
இதன்காரணமாக, ஷிரிஷ் குந்தரை ஷாருக்கான் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்
Share