Monday, January 30, 2012

பிரகாஷ்ராஜூக்கு பாலச்சந்தர் அறிவுரை!

நடிகர், தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் தோனி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார் பிரகாஷ்ராஜின் குருநாதர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.

மனிதர், மற்றவர்களைப்போல பிரகாஷ்ராஜை பக்கம் பக்கமாக பாராட்டி விட்டு தான் போக வேண்டும் என்று வந்திருந்தாலும்., அவரையும் மீறி அடிக்கடி.,  பிரகாஷ்ராஜை சில சமயங்களில் எனக்கும் பிடிக்கும் பல சமயங்களில் எனக்கு பிடிக்காது. என்ன இப்படி பண்றான்? அப்படி பண்றானே..? இது தப்பில்லையா..? என அடிக்கடி அவனைப்பற்றி யோசிப்பேன். இப்பொழுது கூட நிறைய தவறுகள் செய்து கொண்டிருக்கிறான்.அவையெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை! ஆனாலும் அவனது திறைமையை மதித்து நான் வாழ்த்த வந்திருக்கிறேன்.. என்று எதையோ சொல்ல வந்தவர்., சுதாரித்துக் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ் ஷூட்டிங் 6 மணிக்கு என்றால் 10 மணிக்கு வருவதும், சில சமயங்களில் வராமலே போவதும் கேள்விப்பட்டு எனக்கு கோபம்,கோபமாக வரும்! என்னிடம் இன்னமும் பணிவாகத்தான் இருக்கிறான். அவன் பீக்கில் இருந்தபோது அவனை எனது டி.வி., சீரியலில் நான் நடிக்க வைத்ததை பார்த்து பலரும் பலவாறாக டி.வி., சீரியலில் நடிக்காதே என அவனிடம் சொல்லியும், அவர் என் குருநாதர்., அவர் மேலே இருந்ெது கீழே குதி என்றால் நான் குதிப்பேன் என்று அவன் பேசியது என் காதுகளுக்கு வந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அதே நேரம் பிற தவறுகளையும் அவன் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கே.பாலச்சந்தர் தவறு என்று பேசவந்தது அவர் லலிதகுமாரியை பிரிந்து போனிவர்மாவை திருமணம் செய்து கொண்டதைத்தான் என்கிறது விவரமறிந்த வட்டாரம்! நிஜம் என்ன என்பது இயக்குநர் சிகரத்திற்கே வெளிச்சம்
Share