Saturday, October 8, 2011

வடிவேலு இல்ல... சந்தானம்: சுந்தர் சி அறிவிப்பு!!

என் படத்தில் வடிவேலு நடிக்கவில்லை; சந்தானம்தான் நடிக்கப் போகிறார் என்று டைரக்டரும், நடிகருமான சுந்தர் சி. அறிவித்துள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் கவுண்டமணியை மட்டுமே நம்பி படம் எடுத்த சுந்தர் சி, கவுண்டமணி அலை ஓய ஆரம்பித்ததும் வடிவேலு பக்கம் சாய்ந்தார். தனது வின்னர், கிரி, ரெண்டு, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் வடிவேலு காமெடியை திணித்து வெற்றி பெற்றார். இந்த நிலையில்தான் தேவையில்லாமல் அரசியலில் குதித்து திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து தோல்வியை சந்தித்தார்.

கிட்டத்தட்ட சினிமாவில் மீண்டும் நடிக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுந்தர் சி, படத்தில் வடிவேலு மீண்டும் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாயின.  ஆனால் சுந்தர் சி சூட்டோடு சூடாக அதனை மறுத்தார். இந்நிலையில், தான் அடுத்து இயக்கப்போகும் படத்தில் காமெடி கேரக்டரில் நடிகர் சந்தானம்தான் நடிக்கப்போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
Share