Wednesday, April 13, 2011

இலங்கை அணி வீரர்களுக்கு எச்சரிக்கை

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுலாவுக்கு தெரிவு செய்யப்படும் வீரர்கள், பயிற்சிகளின்போது ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து திரும்பி வராவிட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  விளையாட்டுத்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளைவிட தேசிய அணிக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே கூறியுள்ளார். 
எதிர்காலத்தில் இலங்கை அணியின் பயிற்சிகளுக்கு இடையூறு இல்லாத வகையிலேயே வெளிநாட்டு சுற்றுப்போட்டிகளில் பங்குபற்ற இலங்கை அணி வீரர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன உட்பட இலங்கை அணியின் 11 வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர். இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுலா அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல்.சுற்றுப்போட்டி மே 28 ஆம் திகதி முடிவடையவுள்ளது.
Share